09/07/2025
அருட்பணி. தயாளன் கூஞ்ஞ உயர் கல்வியை தொடர உரோமை நோக்கி பயணம் - 08.07.2025
நேற்று அதாவது 08.07.2025 அன்று செவ்வாய்க்கிழமை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக அன்பியம் மற்றும் பாப்பிறை சபைகளின் இயக்குநராக பணியாற்றிய அருட்பணி. தயாளன் கூஞ்ஞ அடிகளார் உயர் கல்வியை தொடர்வதற்காக இத்தாலி உரோம் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார்.
அடிகளாரின் உயர் கல்வி முயற்சிகள் சிறப்பாக அமையவும் உடல் உள ஆன்மீக நலத்தோடு இருக்கவும் மருதமடு அன்னையின் பரிந்துரை வேண்டி மன்னார் மறைமாவட்டம் சார்பாக வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.