Daily Post Salem

Daily Post Salem Welcome

18/08/2026
18/08/2026

தமிழ்நாடு மொபைல் போன் வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் R.B. சோமசுந்தரம் அவர்கள் தென்காசி மாவட்டம் புளியங்குடி மொபைல் சொந்தம் நாகராஜ் அவர்களின் இறப்பிற்கு அவரது குடும்பத்தை சந்தித்து இரங்கல் தெரிவித்ததுடன் குடும்பத்தாருக்கு நலநிதியாக தன் சார்பாக100000 (ஒரு லட்சம்) ரூபாய் வழங்கினார்.
இத்துடன் புளியங்குடி நகர சங்கம் வசூலித்த இருபதாயிரம் ரூபாயும் சேர்த்து நாகராஜ் குடும்பத்தாரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அளிக்கப்பட்டது.

மேலும் நமது மாநில தலைவர் அவர்கள் நாகராஜ் குடும்பத்தாரின் குழந்தைகளுக்கு கல்வி தேவைக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் செய்வதாக அந்த தருணத்தில் உறுதி அளித்தார்.
மொபைல் சொந்தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தலைவர் நேரடியாக வந்து கலந்து கொண்டு உதவி செய்வது தென்காசி மாவட்டம் மொபைல் சொந்தங்களிடம் ஒரு புதிய நம்பிக்கையை இன்று உருவாக்கியது.

நல்லா இருப்போம்

18/08/2026

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ்
சித்தர் கோயில் பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது இதில் சிவராஜ் குழுமத்தின்
நிர்வாக இயக்குனர் கல்பனா சிவராஜ் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்
இதில்
உறவினர்கள் பொதுமக்கள் என
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிராமங்களாக சென்று தூய்மை பணி மேற்கொண்டனர்.

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு  சட்ட படிப்பிற்கான முதலாமாண்டு தொடக்க விழா!சேலம், ஆக.17சேலம் சென்ட்ரல் சட்டக்க...
18/08/2026

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்ட படிப்பிற்கான முதலாமாண்டு தொடக்க விழா!

சேலம், ஆக.17
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்ட படிப்பிற்கான முதலாமாண்டு தொடக்க விழா கல்லூரியில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் மாநகர காவல் துணை ஆணையர் பி.மகேந்திரன் I.P.S கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் த.சரவணன் தனது தலைமையுரையில் மாணவர்கள் சமுதாயத்தில் ஒரு நல்ல வழக்கறிஞராக திகழ புத்தக அறிவு மட்டும் போதாது,அதனையும் தாண்டி நிறைய நூல்களையும் செய்தித்தாள்களையும் தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும், அதனால் மொழிபுலமையும் வளர்வதால் அதனை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் அறிவும் வளரும் என்றும்,சமூகத்தில் பல தவறான போதை பழக்கங்கள் பெருகி வரும் சூழலில் அதில் கவனம் செலுத்தாமல் நல்ல வழியில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,தங்களை மேம்படுத்தி கொள்ள மாதிரி நீதிமன்றங்கள்,பயிற்சி பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் பி.மகேந்திரன் I.P.S தனது சிறப்புரையில் சட்டம் எப்படி தோன்றியது என்பதை வரலாற்றின் மூலம் எடுத்துகூறி அதனால் தற்போது ஏற்படும் தனி நபர், குழு பிரச்சினைகளை எப்படி களைய வேண்டும் என்பதையும் சிலப்பதிகாரம் மற்றும் திருக்குறள் போன்ற நூல்களை மேற்கோள் காட்டி நீதிபரிபாலனைகள் முற்காலத்தில் எப்படி இருந்தது என மாணவர்களுக்கு விளக்கமாக கூறினார்.
இவ்விழாவில் வரவேற்புரையை கல்லூரியின் பேராசிரியர் கே.கர்ணன் அவர்களும், பேராசிரியர் எம்.பாஸ்கரன் அவர்கள் நன்றியுரையும் கூறினார்கள்.இவ்விழாவில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி எ.மாணிக்கம்,முதல்வர் பேகம் பாத்திமா, கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட நீதித்துறை சார்ந்த மூத்த வழக்கறிஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

12/08/2026

சேலம் ஆட்டையாம்பட்டி பேரூராட்சி ஸ்ரீ எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் பதிமூன்று ஆண்டுகளாக இயங்கி வரும் ஸ்ரீ திருமலா புஷ்ப கைங்கர்ய சாபாக் குழுவினர் சார்பில் 4-ஆம் ஆண்டு மாபெரும் அன்னதான விழா இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஆட்டையாம்பட்டியார் (எ) கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தார் இணைந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

11/08/2026

Rain in Salem

10/08/2026

சத்தாபரணம்!

Address

Salem

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Post Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category