08/07/2024
உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்;
(அல்குர்ஆன்: 16:15)
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது;
(அல்குர்ஆன்: 36:38)
இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
(அல்குர்ஆன்: 21:33)
இந்த குர்ஆன் வசனங்களின் மூலமாக பூமி அசையவில்லை,அசையாமல் இருப்பதற்காகவே மலைகளை நிறுத்தியிருப்பதாக அல்லாஹ் கூறும்போது,பூமி அசைந்து சுற்றுவதாக அறிவியல் விஞ்ஞானிகள் ஏற்கனவே கூறியது பச்சை பொய்.அதே போல் சூரியனை பூமி சுற்றி வருகிறது என்பதுவும் பொய்.ஏனெனில் குர்ஆனில் சூரியன்தான் அதன் பாதையில் அதாவது அதன் வரையறையில் சென்று கொண்டிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். கூறபட்ட அத்தகைய பொய்களை தற்போது உண்மையாக்க வேண்டும் எனும் நிர்பந்தத்தில் பூமி எதிர் திசையில் சுற்றுவதாக கூறுவதானதும் பச்சை பொய்யே.
மீண்டும் மீண்டும் பொய்யை கூறுவதற்கான அவர்களின் நிர்பந்தம் என்னவெனில்…. அல்லாஹ்வின் கூற்றுக்களை பொய்யாக்குவதே அவர்களின் நோக்கம்.
அந்த வகையில் கிழக்கிலிருந்து உதயமான சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும் என்ற நபிமொழியின் உண்மை நடந்தேறும் என்பதனை நம்புகின்ற தஜ்ஜாலின் அறிவியலாளர்கள், தாங்கள் கூறிய பொய்யான தகவலான பூமி சுற்றுவதாலும், அது தற்போது எதிர் திசையை நோக்கி சுற்றுவதாலும்தான் இந்நிகழ்வு என நிருபிக்க முயல்கிறார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் கூற்று ஒரு போதும் பொய்யாகாது. பூமி அசையவில்லை அதாவது சுற்றவில்லை சூரியன்தான் அதன் வரையறை பாதையில் பூமியை சுற்றி வருகிறது
என்பதுவே உண்மை.அவ்வாறு சுற்றி வந்து கொண்டிருந்த சூரியன் ஒரு நாள் எதிர் திசையை நோக்கி அதாவது வந்த பாதையை நோக்கி செல்வதற்கு சூரியனுக்கு அல்லாஹ் உத்தரவிடவே எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் அந்த சூரியனே எதிர் திசையில் சுற்றுகிறது.
அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், 'அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, 'வந்த வழியே திரும்பி விடு' என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்' என்றார்கள். இதைத் தான், 'சூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்' என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது' என்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 3199. , அத்தியாயம்: 59. படைப்பின் ஆரம்பம்)
அல்லாஹ்வின் கூற்றுக்கு மாற்றமாக இந்த தஜ்ஜாலிய அறிவியலாளர்கள் கூறுவது பச்சை பொய்,அதனை நம்புவது இறை வசன மறுப்பில் கொண்டு போய் விடுவதாகவும் ஆகிவிடலாம்.நம்மை இறை மறுப்பில் கொண்டு செல்வதே இந்த தஜ்ஜாலிய கூட்டங்களின் நோக்கம்.
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்….
-அ.அகமது பகுருதீன்-