10/03/2023
தோழமைகளுக்கு வணக்கம்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 42 வது வட்ட மாமன்ற உறுப்பினர் தோழர் மோ.ரேணுகா அவர்களின் முழு முயற்சியால்
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 92 லட்சத்தை ஒதுக்கீடு செய்து ஜீவா பூங்காவை புதுப்பித்துள்ளனர்...
ஜீவா பூங்கா எனும் பெயரில் இதுவரை இருந்ததை தோழர் ஜீவா பூங்கா பெயர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது...
59 ஆண்டுகளுக்கு முன்பாக வைக்கப்பட்ட தோழர் ஜீவா சிலையை புதுப்பிக்கும் பணியும் செய்யப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.மேலும் சிலை உள்ள இடத்தில் ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது...
நவீன வடிவமைப்புடன் பூங்கா வருகிற மார்ச் 10 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு திறக்கப்பட உள்ளது...
இந்த நிகழ்வில்...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் இரா.நல்லகண்ணு அவர்களும்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்களும்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்களும்,
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி அவர்களும்,
ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஜே.ஜே எபினேசர் அவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.கே.நகர் தொகுதி குழு சார்பாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வடசென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி தோழர்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
த.கு.வெங்கடேஷ் வேம்புலி,
மாவட்டச் செயலாளர்.