Trichy Mahilchi

  • Home
  • Trichy Mahilchi

Trichy Mahilchi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trichy Mahilchi, Photographer, .

09/06/2026

திருச்சி

உர விலையை கட்டுப்படுத்தவும், டிராக்டர்களுக்கான சாலைவரி மற்றும் டீசல் வரியை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கோரிக்கை முழக்க மனு

விவசாய பயிர்கடன்களை தமிழக முதல்வர் முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும், விவசாய கருவிகளுக்கான பட்டியலில் டிராக்டர்களையும் இணைத்து வேளாண் டிராக்டர் டீசலுக்கு முழு வரிவிலக்கு கொடுத்திட வேண்டும், உறவினையை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இன்றைய தினம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது, இதில் ஏராளமான விவசாயிகள் கோரிக்கையும் விளக்கங்களை எழுப்பியவாறுவந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர் ❤️🚜👑

05/06/2026

ஜூன் 13-ல் திருச்சி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 7 நீதிமன்ற மையங்களில் 27 அமர்வுகள் அமைக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் சமரச முறையில் தீர்க்கப்பட உள்ளன.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த லோக் அதாலத்தில் 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்வு காணப்பட்டதுடன், ரூ.97 கோடி மதிப்பிலான இழப்பீடு மற்றும் கோரிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த ஆண்டும் வங்கி கடன், காசோலை மோசடி, மோட்டார் விபத்து இழப்பீடு, குடும்பத் தகராறு, தொழிலாளர், நுகர்வோர் மற்றும் சிவில் வழக்குகள் உள்ளிட்ட சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. இதற்கான முன்-லோக் அதாலத் சமரச அமர்வுகள் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளன.

மேலும் லோக் அதாலத் பற்றி மக்களிடையே போதுமான விழிப்புணர்வு உள்ளது என்றும் இந்த விழிப்புணர்வை மேலும் விரிவு படுத்த வேண்டும்,

இது தொடர்பாக சந்தேகம் இருப்பின் திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தொலைபேசி எண் 0431-2460125 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நீதிபதியும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான திரு. எம். கிரிஸ்டோபர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

31/05/2026

திருச்சி மாவட்டத்தின் 147 வது ஆட்சியராக பிரத்திக் தயாள், பொறுப்பேற்றார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த வே. சரவணன், தருமபுரி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தமிழக நிதித்துறை இணை செயலாளராக பணியாற்றி வந்த பிரத்திக் தயாள், திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

“மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நேர்மையான, திறமையான நிர்வாகத்தைக் கொடுப்பது என்பன எனது நோக்கங்களாகும்“

29/05/2026

✨ ஈகை பெருநாள் தொழுகையின் ஆன்மிக ஒளியில் ஒன்றான இதயங்கள் 🤍
திருச்சி நகரம் முழுவதும் துஆவும், சகோதரத்துவமும் நிறைந்த தருணம் 🌙🕌
#திருச்சி #ஈகைப்பெருநாள்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy Mahilchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Photography Service?

Share