11/05/2026
இன்று பதவிக்காக ஏங்கும் நபர்கள்....
இத்தனை நாட்களாக கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக தனது வயதை மீறிய உழைப்பை கழகத்திற்காக வழங்கிய ஐயா எடப்பாடி யாரின் உழைப்பில்......
நாங்களும் பங்கெடுத்து கொள்கிறோம் என்று கூறி முன்னணி தலைவர்கள் தமிழக முழுவதும் ஆங்காங்கே சென்று கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்திருந்தால் .....
இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும்.....
வேண்டாம் சொந்த மாவட்டத்தில் ஆவது மாவட்ட செயலாளர் என்ற முறையில் கழக வேட்பாளர்களுக்காக அவர்களின் வெற்றிக்காக பாடுபட்டிருந்தால் கூட போதும்....
அதையெல்லாம் உங்களால் செய்ய முடியாது.....
எவராவது ஒருவர் உழைப்பில் வெற்றி பெற்று அமர்ந்தால் அதில் அதிகாரம் பண்ணிக்கொண்டு தங்களைத் தவிர யாரையும் வளர விடாமல் தடுப்பீர்கள்....
கழகம் தோல்வியுற்றால் ஒருவர் மீது மட்டுமே பழியை சுமத்தி உங்கள் பதவி வெறி க்காக வேறு பக்கம் செல்வீர்கள்.....
இது என்ன மாண்பு.....
அனைத்தையும் அதிமுக தொண்டர்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர்.....