Beauty Of Girls

Beauty Of Girls Cricket, Sports News, Movies, Album Collections, Entertainments, Political News. Fun.

திமுக சமீபத்தில் செய்த மிகப்பெரிய வரலாற்று பிழை என்னவென்றால் விஜய்யை ஆட்சியில் அமரவிட்டது. இது சிறுபிழையோ, மீட்டுவிடக்கூ...
17/06/2026

திமுக சமீபத்தில் செய்த மிகப்பெரிய வரலாற்று பிழை என்னவென்றால் விஜய்யை ஆட்சியில் அமரவிட்டது. இது சிறுபிழையோ, மீட்டுவிடக்கூடிய தவறோ அல்ல. கிட்டத்தட்ட முதல்வன் படத்தின் காட்சிதான் அரங்கேறியிருக்கிறது. அதில் முதல்வரான அரசியல்வாதி ரகுவரன், தன்னை போல் இந்த சாதாரண மனுதன் அர்ஜூனால் ஆட்சியை திறம்பட நடத்த முடியாது, அதன் பிரச்சினைகள் நாற்புறமும் இருந்து ஒரே நேரத்தில் தாக்கும் போது அழுத்தம் தாங்காமல் ஓடி விடுவார் என நினைத்து ஒரு நாள் முதல்வராக்கிவிடுவார். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக அந்த ஒருநாளில் சில தீர்வுகள், நடவடிக்கைகள் என அதிரடியாக எடுத்தது மட்டுமல்லாமல் அதை அக்காலத்தின் ரீல்சான டிவி ஒளிபரப்பு மூலம் மக்களுக்கு கடத்தி மக்களிடம் நன்மதிப்பும் பெற்றுவிடுவார், பின்னர் நிரந்தர முதல்வராகிவிடுவார்.

அதே கதையாகிவிட்டது இன்று நாம் பார்க்கும் நிகழ்வுகள். விஜய் கொஞ்ச காலம் ஆளட்டும், அவர் ஆட்சி நடத்த தெரியாமல் ஆள்வார், அழுத்தம் தாங்காமல் மிரள்வார், மக்கள் இதை பார்த்து இவர்களுக்கு ஆளத்தெரியவில்லை, நாம் பழையபடி திமுகவுக்கே ஓட்டு போட்டுவிடுவோம் என நினைத்து மறுபடியும் அடுத்த தேர்தலில் தமக்கே ஓட்டுபோடுவார்கள் என நினைத்தார்கள் போல. அதனால்தான் தங்களது கூட்டணி கட்சியினரை தாரைவார்த்து ஆட்சியில் அமர்த்தி கொடுத்தனர். இதை நாம் சொல்லவில்லை, திமுக தலைவரும் இளைய தலைவருமே சொன்னது. ஆனால் நடந்தது என்னவோ எதிர்மாறாக. முதல் நாள் முதல் கையெழுத்தாக மக்களின் பிரதான பிரச்சினைகளான பெண்கள் பாதுகாப்பு, போதை தடுப்பு போன்றவற்றை தேர்ந்தெடுத்தது நல்லதொரு மாஸ்டர் ஸ்ட்ரோக். அடுத்து கமிஷன் வேண்டாம் என்ற அறிவிப்புகள், துறைரீதியான ஊழலுக்கு எதிரான சில நடவடிக்கைகள், காசுவாங்காமல் பள்ளி அனுமதிகள், ட்ரான்ஸ்ஃபர்கள் என அடுத்தடுத்து ஸ்கோர் செய்துகொண்டே போகிறார்கள். ஊழல் இல்லாமல் ஆட்சி செய்யமுடியாது, எத்தனை நாட்கள் இப்படி போகிறார்கள் பார்போம், என எதிர்கட்சிகள் என்ன சொன்னாலும் அது இங்கு எடுபடாது. புதிதாக வருபவன் தாமதாக ஊழல் செய்ய பழகுவான், கொஞ்சமாக செய்வான் என ஏற்கனவே மக்கள் சொல்வார்கள், அதே புள்ளிக்குதான் சமூகத்தின் பொதுபுத்தியில் இது பதியும். அதாவது பிற்காலத்தில் இவர்கள் ஊழலே செய்தாலும் உனக்கு அவன் குறைவுதான் என மக்கள் சொல்வார்கள். இப்போதே பொதுமக்கள் பலர், விஜய் ரசிகர் அல்லாதோரும் இந்த ஆட்சி பரவாயில்லையே என பேசத்தொடங்கிவிட்டனர். தொடர்ந்தால் நிரந்தர முதல்வர்தான்.

ஆட்சிக்கு எதிராக மின்தடை போன்ற சில விஷயங்கள் சொல்லலாம், ஆனால் அதையும் மக்களே வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள். இதை வேண்டுமென்றே அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த சிலர் செய்கின்றனர் என மக்களே யோசிக்கிறார்கள். அதற்கேற்றவாறு எல்லா மின்தடை செய்திகள், பதிவுகளில் உபிகள் கதறு கதறு எங்களுக்கு ஓட்டு போடவில்லை அல்லவா? அனுபவி என்று பதில் கமெண்ட் போட்டு குதூகலிக்கிறார்கள், இதுவும் மக்களிடம் தவறாகதான் சென்று சேரும். மொத்தத்தில் பெரிய ஆட்சி அதிருப்தி இதுவரை இல்லை.

திமுக விஜய்யை ஆட்சியில் அமர்த்த முடிவெடுக்க, கவர்னர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் கூட்டணி கட்சிகளை அனுப்பினோம் என்றார்கள். இந்த கருத்தை யார் அவர்கள் மனதில் புகுத்தினார்கள் தெரியவில்லை, ஒருவேளை கூட்டணி மாற தயாராக இருந்த கூட்டணி கட்சியினரே புகுத்தியிருக்கலாம். அப்படியே கவர்னர் ஆட்சி வந்திருந்தால் என்னவாகியிருக்கும்? பாஜக மறைமுகமாக ஆட்சி செய்யுமா? அந்த அளவுக்கு தெளிவான தலைவர்கள் தமிழகத்தில் இல்லை, இது இன்னொரு அதிகாரிகள் ஆட்சியாகதான் இருந்திருக்கும். தவிர இதையே தங்கள் பிரச்சாரமாக சொல்லி அடுத்த தேர்தலில் திமுக வென்றிருக்கலாம். அந்த வாய்ப்பை இழந்துவிட்டார்கள். விஜய் ஆட்சியா, கவர்னர் ஆட்சியா ? என்றால் கவர்னர் ஆட்சியை தேர்ந்தெடுப்பதே திமுக அதிமுகவுக்கு நீண்டகால நோக்கில் லாபகரமாக இருந்திருக்கும். ஆனால் விஜய் ஆட்சியை தேர்ந்தெடுத்ததன் மூலம் திமுக அல்லது அதிமுகவில் ஒன்று மறைய வேண்டிய சூழலுக்கு எடுத்துவந்துவிட்டனர்.

விஜய் ஆட்சிக்கே வந்திருக்காவிட்டால் அவர் ஆளக்கூடிய கட்சியாக மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டார். தமிழகத்தில் ஆளக்கூடிய கட்சிகள் என மக்கள் மனதில் பதிந்திருப்பது திமுக அதிமுக மட்டும்தான். அந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடிய மதிமுக, தேமுதிக, தமாக, மநீம போன்ற கட்சிகள் ஒரிரு தேர்தல்களில் ஆட்சியை பிடிக்காமல் போனதும் உபகட்சிகள் என்ற மணக்கணக்கில் சேர்த்துவிட்டனர். இங்கு ஆட்சியில் அமர்வது முக்கிய வரலாற்று தருணம். விஜய் இன்று ஆட்சியில் அமராவிட்டால் அதிகபட்சம் திமுக அதிமுக சதி செய்து அவரை கெடுத்துவிட்டனர் என மக்கள் கொதிக்கலாம், ஆனால் ஒருவருட கவர்னர் ஆட்சியில் இதை மறந்துவிடுவார்கள், தேர்தலுல்கு முன் 6 மாதங்களில் நடப்பவை வைத்து மாற்றி ஓட்டுபோடுவார்கள், அதனால் இந்த பூச்சாண்டிக்கே பயந்திருக்க கூடாது.

இப்போது என்னவாயிற்று, விஜய்யும் ஒரு முதல்வர் வேட்பாளர், தவெகவும் ஒரு ஆளுங்கட்சியாக கூடிய கட்சி என மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இனி அந்த இன்னொரு இடத்துக்குதான் திமுக, அதிமுக சண்டையிட வேண்டும். திமுக அதை பிடித்துவிட்டது என எண்ணியே அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என அதன் தலைவர்கள் தவெகவுக்கு தாவுகிறார்கள். விஜய் ஆட்சிக்கு வராமல் கவர்னர் ஆட்சி வந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது, திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தொடர்ந்திருக்கும்.

#பகிர்வு

💥 விரைவில் தமிழக வெற்றி கழகத்திற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் தொலைக்காட்சி சேனலில் பெயரும் லோகோவும் இதுதான் முன்ப...
16/06/2026

💥 விரைவில் தமிழக வெற்றி கழகத்திற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் தொலைக்காட்சி சேனலில் பெயரும் லோகோவும் இதுதான்

முன்பு எஸ் எஸ் மியூசிக் சேனல் இடம் இருந்த லைசென்சை இவர்கள் பெற்று இந்த புதிய சேனலை ஆரம்பிக்க இருக்கிறார்கள்

இவர்களுடைய அலுவலகமாக சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா டிவியின் பின்னே இருக்கும் ஒரு பெரிய கட்டிடம் தயாராகி வருகிறது.

இந்த மீம் கண்டுபிடிச்சவனுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா?  துலாமுக்கு நல்ல ஆளே கிடைக்கலையா? 😆(பின் குறிப்பு : எல்லா...
16/06/2026

இந்த மீம் கண்டுபிடிச்சவனுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா? துலாமுக்கு நல்ல ஆளே கிடைக்கலையா? 😆

(பின் குறிப்பு : எல்லாரும் உங்க ராசி என்னன்னு சொல்லிட்டு போங்க பார்த்து பொறாமைப்பட்டுகிறேன்) 😎

காணவில்லை♦️கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பியை சேர்ந்தவர் ஜென்சிலின். 19 வயதான இந்த கல்லூரி மாணவியை கடந்த 13 ஆம் தேதி ...
15/06/2026

காணவில்லை

♦️கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பியை சேர்ந்தவர் ஜென்சிலின். 19 வயதான இந்த கல்லூரி மாணவியை கடந்த 13 ஆம் தேதி முதல் காணவில்லை. கடந்த 13 ஆம் தேதி சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ஏறிய இந்த மாணவி சென்னைக்கு சென்று சேரவில்லை. இவரைக் குறித்த தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது இந்த எண்ணில் 9487727298 தொடர்பு கொள்ளவும். நன்றி🙏

Please Share🙏

இவ்வளவு விஷயங்களையும் நேரில் பார்த்த ஒரே தலைமுறை நாம்தான் 😱கோவிட்-19 பெருந்தொற்றுலாக்டவுன்போர் ஒத்திகைகள் (Mock Drills)ஆ...
14/06/2026

இவ்வளவு விஷயங்களையும் நேரில் பார்த்த ஒரே தலைமுறை நாம்தான் 😱

கோவிட்-19 பெருந்தொற்று

லாக்டவுன்

போர் ஒத்திகைகள் (Mock Drills)

ஆபரேஷன் சிந்தூர்

விஜய் முதலமைச்சராக ஆனது💥

திமுக, அதிமுக இரண்டும் தோற்றது🤡

"History புத்தகத்துல படிக்குறதுக்கு முன்னாடியே Live-ஆ பார்த்த தலைமுறை!" 😵‍💫🔥

மஞ்சள் கோடும் மரண போர்டும்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விழித்துக் கொள்ளுமா??*நெல்லை நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேற...
14/06/2026

மஞ்சள் கோடும் மரண போர்டும்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விழித்துக் கொள்ளுமா??*

நெல்லை நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வாகனத்தின் வேகத்தை குறைப்பதாக கூறி மஞ்சள் கோடு வரையப்பட்டது. பின்னர் அதன் தடிமன் உயர்த்தப்பட்டு தற்போது வேகத்தடையாக அவை செயல்படுகின்றன. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் அந்த வேகத்தடையின் அதிர்வில் சிக்கி சேதம் அடைகின்றன அல்லது விபத்துக்குள்ளாகின்றன.

12 .6 .2026 அன்று நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நடந்த கார் ஆட்டோ விபத்தில் மஞ்சள் கோடு மீது பயணித்த கார் நிலை தடுமாறி அருகில் சென்ற ஆட்டோவின் மீது மோதி விபத்து துவங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து இருவர் பலியாகினர். ஐந்து பள்ளி மாணவர்கள் உட்பட 7 காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான கார் சாலையோரம் இருந்த சுங்க சாவடி அறிவிப்பு போர்டு மீது மோதி சேதமடைந்ததில் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களில் உள்ள மனித உயிர்பலி வாங்கும் போர்டுகளாக மாறியுள்ளன.

அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் இந்த மஞ்சள் கோட்டை/ வேகத்தடையை அகற்ற வேண்டும் என பலமுறை வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நெடுஞ்சாலையில் உள்ள மஞ்சள் கோடு விபத்தை தடுக்கும் என நெடுஞ்சாலை துறையால் கூறப்பட்டாலும் நடப்பு செயல்பாடு நேர்மாறாக உள்ளது.

அதேபோல சுங்கச்சாவடி வசூல் மையத்தின் நுழைவுப் பகுதியில் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு 20க்கும் மேற்பட்ட மெகா சைஸ் அறிவிப்பு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவை சாலையின் உள்பகுதியில் நீண்டிருப்பதால் வாகனங்களில் அவ்வப்போது உரசி சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக லாரிகள் அடிக்கடி இந்த பலகையில் சிக்கி விபத்தை சந்திக்கின்றன.

சுங்க சாவடி கட்டணம் தொடர்பான அறிவிப்புகள் அந்த பலகைகளில் இடம் பெற்றிருந்தாலும் எந்த வாகன ஓட்டியும் அங்கு நின்று பலகையை வாசிக்க முடியாத அளவுக்கு அமைத்துள்ளனர். சாலையின் ஓரத்தில் குறுகிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு போர்டுகளால் பேராபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த போர்டுகளின் முனைகளில் சாலையோரம் ஒதுங்கும் லாரிகள் உரசி செல்வதைப் போல பயணிகள் பேருந்து உரச நேரும்போது பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே அந்த பெரிய போர்டுகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் அல்லது மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள். தெரிவித்துள்ளனர்.

மேலும் சில இடங்களில் சாலை நடுவே சிவப்பு கம்பளம் விரித்தாற் போல் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. அதில் WELCOME NH-A1என எழுதப்பட்டுள்ளது. இது எதற்காக எழுதப்பட்டது?? என வாகன ஓட்டிகள் குழப்பத்தில் உள்ளனர். சாலை நடுவே தடிமனாக வரையப்பட்ட இந்த பதாகை அமைப்பு வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் உள்ளது. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகவே தேவையற்ற வகையில் சாலை நடுவே அமைக்கப்பட்ட சிவப்பு நிற கம்பள விரிப்பு போன்ற அறிவிப்பையும் அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து விடுத்துள்ளனர் .
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விழித்துக் கொண்டு விபத்துகளை தடுக்குமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நன்றி

Post Courtesy: Aadhi Priya Vallioor 🙏🤝

"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன்      ‌
14/06/2026

"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன்

"சார், மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்காங்களே..."?"விவசாயிகளை முதல்வர் விட்டுவிட மாட்டார். அவர்க...
13/06/2026

"சார், மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்காங்களே..."?

"விவசாயிகளை முதல்வர் விட்டுவிட மாட்டார். அவர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் எங்க தளபதி நிவாரணம் கொடுப்பார்..."

# இவர் தான் வேளாண் துறை அமைச்சராம். பெயர் தெரியவில்லை. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறப்பார்கள். இதை தான் நிருபர் கேள்வி கேட்கிறார். ஒரு சாதாரண கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லை. 'எங்க தளபதி நிவாரணம் கொடுப்பார்..' என்பது எப்படி ஒரு பிரச்சனைக்கான பதில் ஆகும்...?

மேட்டூர் அணையை திறக்காமல் எத்தனை விவசாயிகளுக்கு இவர்கள் நிவாரணம் கொடுப்பார்கள்..? நிவாரணம் கொடுத்தால் பிரச்சனை சரியாகி விடுமா..? விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்தாலும், விவசாயம் எப்படி நடக்கும்...? மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா...?

# ஒரு துறை அமைச்சர் மக்காக இருக்கலாம். ஆனால், இப்படி எல்லாருமே மக்காக இருந்தால் தமிழ் நாடு அதாள பாதாளத்தில் தான் விழும்!!!

#பகிர்வு

🤯 அடுத்த 5 வருஷத்துல 3 உலகக்கோப்பை ஜெயிப்போம்! – பாகிஸ்தான் கேப்டன் சாகிப்ஜாதா ஃபர்ஹானின் அதிரடி சவால்!​பாகிஸ்தான் கிரிக...
13/06/2026

🤯 அடுத்த 5 வருஷத்துல 3 உலகக்கோப்பை ஜெயிப்போம்! – பாகிஸ்தான் கேப்டன் சாகிப்ஜாதா ஃபர்ஹானின் அதிரடி சவால்!

​பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள சாகிப்ஜாதா ஃபர்ஹான் (Sahibzada Farhan), தங்களது அணியின் எதிர்காலம் மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டிகள் குறித்து வெளியிட்டுள்ள ஒரு அதிரடியான அறிக்கை தற்பொழுது கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதப் புயலை கிளப்பியுள்ளது.

​அவர் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் துணிச்சலாகப் பேசுகையில், "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என் மீது அசாத்திய நம்பிக்கை வைத்து கேப்டன்சி பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளது. அதற்குத் தகுந்தபடி என் அணியை மிகச்சிறந்த முறையில் வழிநடத்த எனது முழு உழைப்பையும் கொடுப்பேன்.

இன்ஷா அல்லாஹ், அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி நிச்சயம் 2 முதல் 3 உலகக்கோப்பை (World Cup) டிராபிகளை வென்று அசாத்திய சாதனை படைக்கும்" என்று மிக உறுதியாகக் கூறியுள்ளார்.

​மேலும் இந்திய அணியுடனான மோதல் குறித்துப் பேசிய அவர், "அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள ஒவ்வொரு முக்கிய ஐசிசி தொடர்களிலும் (Major Tournaments) பாகிஸ்தான் அணி இந்தியாவைத் வீழ்த்தி அசாத்திய வெற்றியைப் பதிவு செய்யும்" என்று இந்திய அணிக்கும் ஒரு திறந்த சவாலை விடுத்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்ற போதிலும், ஃபர்ஹான் காட்டியுள்ள இந்த அசாத்திய தைரியம் மற்றும் அதீத நம்பிக்கை தற்பொழுது இணையத்தில் ரசிகர்களிடையே காரசாரமான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

அமைச்சர் ரமேஷை சூழ்ந்துட்டு கோவில் பணியாளர்கள் சில கோரிக்கை வைக்கறாங்க. அவர் உடனே 'யாருங்க Officer வாங்க.. இந்த contract...
13/06/2026

அமைச்சர் ரமேஷை சூழ்ந்துட்டு கோவில் பணியாளர்கள் சில கோரிக்கை வைக்கறாங்க. அவர் உடனே 'யாருங்க Officer வாங்க.. இந்த contractorஐ மாத்தீட்டு சரியா சம்பளம் கொடுக்கற ஆளை போடுங்க'ன்னு சொல்லீட்டு போயிட்டார். 😯👏

அமைச்சர் விக்னேஷ், பெட்டி இறக்கறதுக்கு இன்னொருதரப்பு காசு வாங்கறதை ஆய்வு செய்றப்ப கேள்விப்பட்டு , 'அவங்களே குறைவா சம்பளம் வாங்கறவங்க அவங்ககிட்ட எதுக்கு பெட்டி இறக்க பணம் வாங்கறீங்க'ன்னு warning குடுக்கறார். 👏

அமைச்சர் பிரபு சம்மந்தப்பட்ட சங்கம் & குவாரி ஆளுக எல்லாரையும் கூப்பிட்டு meeting போட்டு , அதிகமா பணம் வாங்கக்கூடாது, சொன்ன அளவைவிட வெட்டக்கூடாது மீறனா கடும் நடவடிக்கை எடுக்கப்படும்னு order போடறார். வெளிய வந்து அவங்க இந்த கூட்டம் ரொம்ப சிறப்பா நடந்துமுடிஞ்சதுன்னு‌ பாராட்டீட்டு போறாங்க.

அம்மா உணவகத்துல Painting, reconstruct வேலை நடந்துட்டே இருக்கு. எல்லாம் freshஆ இருக்கு, Wash basin cleanஆ maintain ஆகுது. Private Hotel மாரி சுத்தமா இருக்கு.👌👏

Register officeல 37 லட்சம் cash கணக்குல வராத பணம் cease பண்ணீருக்காங்களாம்.
இலஞ்சம் வாங்கவே பயப்படறாங்கன்னு பத்திரிக்கையாளர்கள் சொல்றாங்க. 👏👏

ஏதோ முதல்வன் படம் பாக்கறமாரியே இருக்கு..👌👏🔥

ஒருமாசத்துல இவ்ளோ பெரிய initiation பண்ணமுடியும்னா 5 வருசத்துல எவ்ளோ பண்ணலாம், கடந்த ஆட்சிகள்ல எவ்ளோ பண்ணியிருக்கலாம். 😑

"நன்மையால் தீமையை வெல்வோம்.. "

#பகிர்வு

Address

Kanyakumari

Alerts

Be the first to know and let us send you an email when Beauty Of Girls posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share