12/01/2026
1960-களில் நம் முன் தலைமுறை முன்னெடுத்த அந்த வீரமிக்க மொழிப் போராட்ட வரலாற்றைத் திரையில் காண ஆவலோடு இருந்தேன். ஆனால், இன்று உலகம் முழுவதும் 'பராசக்தி' திரைப்படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்களில் இருக்கைகள் வெறிச்சோடிக்கிடப்பதைக் காண்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
ஆயிரக்கணக்கான பக்கச்சார்பான கட்டுரைகள், திரைக்கு வெளியே திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போலி விமர்சனங்கள், பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றது, ஏன்... போக்குவரத்து நெரிசல் என ஒரு முன்னணி நாளிதழ் பரப்பிய போலிச் செய்திகள் என எத்தனையோ 'வித்தைகள்' செய்தும் மக்கள் மனதை வெல்ல முடியவில்லை.
இதற்கான காரணம் மிகத் தெளிவானது: புனிதமான போராட்ட வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் லாபத்திற்காக (Party Agenda) பயன்படுத்த முயன்றதும், அந்த ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியுமே (Anti-incumbency) இந்த நிலைக்குக் காரணம். மக்கள் எதையும் திணிக்க விரும்புவதில்லை; அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தாங்கள் உண்மையிலேயே நேசிக்கும் ஒரு நாயகனைத் தேடுகிறார்கள்.
செயற்கையான விளம்பர வெளிச்சங்கள் ஒருபோதும் மக்களின் உண்மையான அன்பிற்கு ஈடாகாது. காலம் மாறிவிட்டது, மக்களின் ரசனையும் தேடலும் இப்போது ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியுள்ளது.
உண்மையான மக்கள் சக்தியின் முன்னால் எந்த அதிகார பலமும் எடுபடாது என்பதற்கு இந்த வெறிச்சோடிய தியேட்டர்களே சாட்சி.
"ஜனநாயகம் வெல்லும்... ஜனநாயகன் வெல்வான்!"